ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

Default Image

ராஜீவ் வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்கூட்டியே  விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பின்னர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே  அளிக்கப்பட்ட பதிலில்  7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று விளக்கம் அளித்தது .இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்