ரஜினியின் ஆசீர்வாதம் மட்டுமே போதும், விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் – அர்ஜுனமூர்த்தி

Published by
பாலா கலியமூர்த்தி

ரஜினிகாந்த் ஆசீர்வாதம் மட்டுமே போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றத்தின் பயணம் விரைவில் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. நமது தலைவருக்கு உடல் நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன்.

இதனை ஈடுசெய்யும் வகையில், ரஜினிகாந்தின் நீண்ட கால அரசியல் மாற்றத்திற்கு நினைவானது நிச்சியமாக நிகழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்போது என்று சொல்லிய ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.

நமது தலைவர் ஒரு நடிகராக, அவரது தொழில் தர்மத்தின் காரணமாக அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் வரக்கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என விரும்புகிறேன். என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.

ரஜினிகாந்த் தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகன் என்று பெருமை கொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கேட்ட பெயரை நாம் ஏற்படுத்தமாட்டோம். ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

30 minutes ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

2 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

2 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

4 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

5 hours ago