கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதானால் ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வைரஸ் நோய் இந்தியாவிலும் 250-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது.அது மூன்றாவது நிலைக்கு போய் விட கூடாது.
வெளியில், ஜனங்கள் நடமாடும் இடத்தில இருக்க கூடிய கொரோனா வைரஸானது, 12-14 மணி நேரங்கள் அது பரவாமல் இருந்தாலே, அது மூன்றாவது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை (மார்ச் 23) தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.
இதேமாதிரி, இத்தற்காலியில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இரண்டாவது நிலையில் இருக்கும், அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால், அந்நாட்டு மக்கள் அதனை உதாசீனப்படுத்தியதால் தான், இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.
இதேமாதிரி நம்முடைய இந்தியாவிலும் நடக்க கூடாது. எனவே அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு இணைந்து செயல்படுவோம். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடும், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும், பிரதமர் மோடி அவர்கள் கூறியவாறு, அன்று மாலை 5 மணியளவில் பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அவர்களது குடும்பம் நலமுடன் இருக்கவும் வேண்டிக் கொள்வோம்.’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…