கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதானால் ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வைரஸ் நோய் இந்தியாவிலும் 250-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது.அது மூன்றாவது நிலைக்கு போய் விட கூடாது.
வெளியில், ஜனங்கள் நடமாடும் இடத்தில இருக்க கூடிய கொரோனா வைரஸானது, 12-14 மணி நேரங்கள் அது பரவாமல் இருந்தாலே, அது மூன்றாவது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை (மார்ச் 23) தேதி ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.
இதேமாதிரி, இத்தற்காலியில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இரண்டாவது நிலையில் இருக்கும், அந்நாட்டு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால், அந்நாட்டு மக்கள் அதனை உதாசீனப்படுத்தியதால் தான், இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.
இதேமாதிரி நம்முடைய இந்தியாவிலும் நடக்க கூடாது. எனவே அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு இணைந்து செயல்படுவோம். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, தங்கள் உயிரையே பணயம் வைத்து போராடும், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும், பிரதமர் மோடி அவர்கள் கூறியவாறு, அன்று மாலை 5 மணியளவில் பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அவர்களது குடும்பம் நலமுடன் இருக்கவும் வேண்டிக் கொள்வோம்.’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…