ரஜினியின் முடிவு என்ன ? இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பு

Default Image

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நடிகர் ரஜினிகாந்த் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையின் போது,அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணியளவில் நிறைவுபெற்றுள்ளது.இதனால், ரஜினியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனைக்கு பின்னர் தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தலைவர் ரஜினியிடம் இருந்து அறிவிப்பு வரும். தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்