அதிசயம் நிகழும் -ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம்

Default Image

ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021இல் நடந்தே தீரும் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதல்வராகுவேன் என்று பழனிசாமி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.ஆனால் அந்த அதிசயம் நடந்தது.மேலும் அதிசயம் நேற்றும் நடந்தது,நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.இவரது கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் .அவரது பதிவில்,ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update