ரஜினியின் அரசியல் பிரவேசம்! அடுத்த வருடம் பிரமாண்ட மாநாடு! நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!

Default Image

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகள்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அரசியல் கட்சி தொடங்குவதாக முன்பே தனது ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்து இருந்தார். இவர் தனது ரசிகர் மன்றங்களை 2017ஆம் ஆண்டு ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினர்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் நேரத்தில் அவரின் அரசியல் பயணம் பற்றி கேட்கையில், தனது இலக்கு சட்டமன்றம்தான் என கூறி மீண்டும் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்தார். இந்நிலையில் அண்மையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனயில் ரஜினி ஈடுபட்டார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில், ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதால், தன்னை பாஜகவின் ஆதரவாளராக சித்தரிப்பதும், சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை தள்ளி வைக்க முயற்சி நடைபெறுவதும் குறித்து கேட்டறிந்து வருத்தம் தெரிவித்ததாகவும், அடுத்த வருடம் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இடம் பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்