ரஜினிகாந்த் இந்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரமிக்கவில்லை. ஆனால் மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கொரோனவால் ரஜினியின் கட்சி உதயம், ஆகஸ்டிலிருந்து நவம்பருக்கு தள்ளி போனது எனவும், ஸ்டாலின் கூறிய “ஒன்றிணைவோம் வா” மக்களிடையே சென்றடையவில்லை, ஆனால் ரஜினி கூறிய “சும்மா விடக்கூடாது” என்ற கருத்து, உலகளவில் சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…