சேலத்தில், பெரியார் நடத்திய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஊர்வலம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் பேசியது, திராவிட கழகம்., மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்னொரு பக்கம்,இந்த கருத்திற்க்கு ரஜினியைப் பாராட்டி, ‘மீம்ஸ்’களும் வலம் வருகின்றன. ஏற்கனவே, ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளித்தது. இதற்கிடையே, ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளது. இதில், ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என, அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம். ஏற்கனவே ரஜினியும், கட்கரியும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். இந்நிலையில், இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஆலோசனை நடத்திஉள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு, மத்திய அரசு விரைவில் துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கும் என கூறப்படுகிறது. அப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டால், திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு தரப்பட்ட அதே பாதுகாப்பு, ரஜினிக்கு தரப்படவிருக்கிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…