ரஜினி அரசியலுக்கு வருவேன் என வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார்.! பாஜக எம்.பி விமர்சனம்.!

Default Image
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஜக எம்.பி சுப்ரமணியசுவாமி  சுவாமி தரிசனம் செய்தார்.
  • நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அரசியலுக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் அதிகாரபூர்வ அரசியல் கட்சியை தொடங்கவில்லை. இருப்பினும் அவர் கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஒரு சிலரும், வரமாட்டார் என்று ஒரு சிலரும், வழக்கம்போல வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு இருப்பதாக ஒரு சிலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஜக எம்.பி சுப்ரமணியசுவாமி  சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி, திரைத்துறையினர் அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருக்க வேண்டுமே தவிர, தலைவராக வருவதற்கு நினைக்கக் கூடாது என தெவித்தார். மேலும், நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார் என விமர்சித்துள்ளார். பின்னர் சுப்பிரமணிய சுவாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop