கோயம்பத்தூர் மாவட்டம் சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றி அனைவரிடமும் சொல்லி வருகிறார். இவர் இடையர்பாளையம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். 25 ஆண்டுகளாக முடிவெட்டும் தொழில் செய்து வரும் தேவராஜ், கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றி இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என செய்து வருகிறார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அவரது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து மாற்று திறனாளிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், மன நோயாளிகளுக்கும் கட்டிங், ஷேவிங் செய்யும் பணியில் ஈடுபட்டார். முடிவெட்ட வரும் போது ஆதரவற்றவர்கள் சாப்பிட காசு கேட்பார்கள், சிலர் டீ கேட்பார்கள் எனவும் அவற்றை வாங்கி கொடுத்து அவர்களுக்கு ஷேவிங் செய்து முடி வெட்டிவிடுவதாகவும் தேவராஜன் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கையும் காலும் நன்றாக இருக்கும் வரை இந்த பணியை செய்ய இருப்பதாக தெரிவிக்கும் தேவராஜ், அதிக சந்தோசமும், அதிக வேதனைகள் இருந்தாலும், இங்கு ஷேவிங், கட்டிங் செய்ய வந்து விடுவதாகவும், இதை செய்யும் போது மனது நிம்மதியாகவும், அன்றைய பொழுது சிறப்பாகவும், அமைவதாக உணர முடியும் என தெரிவிக்கின்றார் சலூன் கடை தொழிலாளி தேவராஜ்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…