ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்திற்கு மாநிலச் செயலாளர் நியமிப்பு!

Default Image

ராஜு மகாலிங்கம்  ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினி தனது இயக்கத்தை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமிப்பது குறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே லைக்கா நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி அண்மையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த ராஜு மகாலிங்கம், மாநிலச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்