இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான  நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.

இந்நிலையில், முரளிதரன் இனப்படுகொலையின் போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், விஜய் சேதுபதி இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு,  பிரபலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு பதிலளித்த அவர், ‘இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் முடிவு என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்