ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த போக்சோ நீதிமன்றம் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 3 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…