வெப்பசலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆராய்ச்சி அமையம் தகவல்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களில் தற்போதைய காலகட்டத்தில் மழை பெய்வது வழக்கம். இந்த கால கட்டத்தில் தான் வட மாவட்டங்களிலும் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கும். இம்மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி அமையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி அமையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஏரனியல் பகுதியில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…