தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில்  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூடத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்