கோடை வெயிலை தணிக்க வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திற்கு மழை.!

Default Image

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்தபோது பெய்த இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்நிலையில் மீண்டும் , வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதாபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கன மழை அல்லது மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்