சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிப்பு !!!

Default Image

 

மதுரை கோட்டம் சாா்பில் திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து கோடை கால சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோடை கால விடுமுறையை முன்னிட்டு தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சாா்பில் சிறப்பு கட்டண ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு கட்டண ரயில்கள் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை இயக்கப்படுகின்றன.

அதன்படி ஏப்ரல் 8ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு கோயம்புத்தூா் சென்றடைகின்றது. மறு மாா்க்கத்தில் ஏப்ரல் 11ம் தேதி (புதன் கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மறு நாள் காலை 8.35 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.

இந்த சிறப்பு கட்டண ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்தரம், பழனி, உடுமலை பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போதனூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தொிவிக்கப்படுகின்றது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்