ரயில் டிக்கெட் ரத்து: இன்று முதல் முன்பதிவு மையங்களில் திரும்ப பணத்தை பெறலாம்

Published by
பாலா கலியமூர்த்தி

இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து கட்டணத்தை முன்பதிவு மையங்களில் மூலம் திருப்பி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூட்டத்தை தவிர்க்க, பயணம் செய்ய திட்டமிடப்பட்ட தேதியின் அடிப்படையில் அட்டவணையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 31 வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், ஜூன் 5 முதல் (இன்று) முன்பதிவு மையங்களுக்கு சென்று பணத்தை பெற்று கொள்ளலாம். ஏப்ரல் 1 லிருந்து 14 வரை முன்பதிவு செய்தோர், ஜூன் 12 முதல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 15 லிருந்து 30 வரை, ஜூன் 19 ஆம் தேதி முதல், மே 1 லிருந்து 15 வரை, ஜூன் 26 முதல், 16 லிருந்து 31 வரை, ஜூலை 3 ஆம் தேதி முதல், ஜூன் 1 லிருந்து 30 வரை முன்பதிவு செய்தோர், ஜூலை 10 ஆம் தேதி முதல் முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

4 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

6 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

6 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

9 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

9 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

9 hours ago