ரயில் டிக்கெட் ரத்து: இன்று முதல் முன்பதிவு மையங்களில் திரும்ப பணத்தை பெறலாம்

Published by
பாலா கலியமூர்த்தி

இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து கட்டணத்தை முன்பதிவு மையங்களில் மூலம் திருப்பி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூட்டத்தை தவிர்க்க, பயணம் செய்ய திட்டமிடப்பட்ட தேதியின் அடிப்படையில் அட்டவணையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 31 வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், ஜூன் 5 முதல் (இன்று) முன்பதிவு மையங்களுக்கு சென்று பணத்தை பெற்று கொள்ளலாம். ஏப்ரல் 1 லிருந்து 14 வரை முன்பதிவு செய்தோர், ஜூன் 12 முதல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 15 லிருந்து 30 வரை, ஜூன் 19 ஆம் தேதி முதல், மே 1 லிருந்து 15 வரை, ஜூன் 26 முதல், 16 லிருந்து 31 வரை, ஜூலை 3 ஆம் தேதி முதல், ஜூன் 1 லிருந்து 30 வரை முன்பதிவு செய்தோர், ஜூலை 10 ஆம் தேதி முதல் முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

12 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago