Rahul udhaynidhi [Image-PTI & IE]
மணிப்பூரில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.
மணிப்பூரில் கலவர சம்பவங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று மணிப்பூரின் இம்பால் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து பேசுவதற்காக சென்று கொண்டிருந்த போது, பிஷ்னுபூரில் ராகுலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதற்கு மேல் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக்கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அமைச்சர் உதயநிதியும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி தனது டிவீட்டில், ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கின்ற நிலையில், ராகுல் காந்தி மணிப்பூர் மக்களை சந்தித்து பேச முயற்சி செய்கிறார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டுவருவது தான் முக்கியம். எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கும் செயலைக் கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…