ராகுல் காந்தியின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது-திருநாவுக்கரசர்

Default Image

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த  ராஜினாமா  செய்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். எனவே உடனடியாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.  திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ராகுல் காந்தியின் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது. ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடரவேண்டும் என விரும்புகிறேன்.எல்லோரையும் இணைக்கும் சக்தியாகவும், மக்களை கவர்ந்து இழுக்கும் தலைவராகவும் ராகுல் காந்தி உள்ளார் .தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே காரணம் கிடையாது. யார் இடைக்கால தலைவராக வந்தாலும் அவர் இடத்தை நிரப்ப முடியாது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்