என் தந்தையை இழந்தது போல.. என் நாட்டை இழக்க மாட்டேன்.! – ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி பேச்சு.!

Default Image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘  வெறுப்பு அரசியலால் எனது தந்தை இழந்தேன். அதற்காக என் நாட்டை நான் இழக்க மாட்டேன்.’ என தெரிவித்து உள்ளார்.  

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாதை யாத்திரை செல்ல உள்ளார். இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மாலை கன்னியாகுமரியில் இந்த பயணம் தொடங்கப்பட உள்ளது.

சுமார் 3570 கிமீ தொலைவை இதில் கடக்க உள்ளார் ராகுல் காந்தி. இந்த பயணத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடக்க உள்ளார் ராகுல் காந்தி.

இதில், இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராகுல் காந்தியின் தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமர் ராகுல்காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன் என பேசினார் ராகுல் காந்தி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்