கன்னியாகுமரியில் நாளை நடை பயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி!

Default Image

கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி, மத பிரிவினைவாதம் போன்றவற்றைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

தினமும் 20 கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியுடன் 118 பேர் செல்கின்றனர். இந்த பாதயாத்திரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசம் வழியாக காஷ்மீரில் முடிவடைகிறது. பாதயாத்திரையின்போது, ஒன்றுபடுவோம், ஒருங்கிணைவோம் என்ற கோஷத்துடன் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அப்போது, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கிறார்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி. அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை தொடங்குகிறார். ராகுல் காந்தியின் புரட்சி பயணம் வெற்றி பெற முரசொலி நாளேடு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்