[Image source : Twitter @ikamalhaasan]
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு ராகுல்காந்தி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .
நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். இதில் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் பல்வேறு விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி விட்டதால், நேரம் குறைவாக இருப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட வேலைகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசினார்.
இந்நிலையில், ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஈரோடு இடைத்தேர்தலில் இவிகேஎஸ்.இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்தது போல, ராகுல்காந்தி அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மே முதல் வாரத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…