வருகின்ற தேர்தலில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் மாற்றத்தை உருவாக்குவார்கள் …! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உறுதி

Default Image

வருகின்ற தேர்தலில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி.
கருணாநிதியை கவுரவிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை .கருணாநிதியை எவ்வாறு கவுரவிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.பிரதமர் மோடிக்கு சவாலாக இருக்கிறார் ராகுல் காந்தி, மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம்.வருகின்ற தேர்தலில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்