ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு !இடைக்கால தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம்

Default Image

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நவம்பர் 13ம் தேதி வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்பாவு  வழக்கில் கடைசி மூன்று சுற்றுகள் அதாவது 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை எனவும், 203 தபால் வாக்குகள் செல்லாதவையாக  அறிவிக்கப்பட்டது எனவும், எனவே அந்த வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.,  ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நவம்பர் 13-ஆம் தேதி வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .அதுவரை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips