ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்- தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில்,ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு 24 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது  தபால் ஓட்டு மற்றும் 19, 20, 21 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்