ராதாபுரம் தேர்தல் முடிவு – வெளியிட உச்சநீதிமன்றம் தடை
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அதில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகின்ற 29-ஆம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.