தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என நேற்று திமுக அறிவித்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக பிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்து. பின்னர், பிரியா ராஜனுக்கு ககன் தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால், சென்னை மாநகராட்சியின் 49-வது மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார். இந்த மறைமுக தேர்தலுக்கான கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் 15 பேரும் பங்கேற்கவில்லை, ,பாஜக கவுன்சிலர் கலந்துகொண்டனர்.
28 வயதான பிரியா ராஜன் எம்.காம் பட்டதாரியாக உள்ளார். பிரியா ராஜன் முன்னாள் எம்.எல். ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். வடசென்னை பகுதியான திரு.வி.க நகரிலுள்ள 74-வது வார்டில் பிரியா ராஜன் வெற்றி பெற்றார். இதற்கு முன் தென்சென்னையை சந்தவர்களே திமுகவின் மேயராக தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…