செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாண்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக மருத்துவத் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோன பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய் செலவில் ஆர்டிபிசிஆர் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவியில் நான்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் நிலையில், ஒரு கருவி மூலம் ஒரு மாதிரி மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டதாக கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் அவர்கள் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
மேலும் இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், இதனால் 5 கோடி ரூபாய் அளவிளான கருவிகள் காலாவதி ஆகி விட்டதாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்பொழுது இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்பொழுது கொரோனா பரிசோதனை கருவிகள் கையாண்டதில் முறைகேடுகள் இருப்பது பேராபத்து எனவும், மருத்துவத் துறை செயலாளர் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் முறைகேடுகள் அல்லது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…