நடத்தப்படாத பாடங்களிலிருந்து பொதுத்தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய கல்விக்கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே ஏற்கவில்லை, மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை சிறப்பானதாக இருக்கும். தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம். நமது மாணவர்களுக்கு ஏற்றவாறு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் இதுவரை நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என்றும் உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen