சிறு சிறு வழக்குகள்.. சிறை அதலாத் மூலம் புழல் சிறை விசாரணை கைதிகள் விடுதலை.!

Published by
மணிகண்டன்

சிறை அதலாத் எனும் நீதிமன்ற விதிப்படி, குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, விசாரணை கைதியாக குற்றத்திற்கான தண்டனை காலம் போல, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தால், அவர்களை நன்னடத்தை அடிபடையில், விசாரணை காலத்தை தண்டனை காலமாக கருதி  விடுதலை செய்வார்கள்.

அப்படி தான் தற்போது, சென்னை புழல் மத்திய சிறையில் வெளியில் செல்ல முடியாமல்,  பிணையில் இருக்கும் சிறு வழக்குகளில் ஈடுபட்ட சிறைவாசிகளை,  ’சிறை அதாலத்’ விதிப்படி, சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில், சிறை கைதிகளுடன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசுகையில்,  உங்களை குற்றவாளிகள் என சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இனிமேல் எந்த தவறும் செய்யாமல் திருந்தி வாழ வேண்டும். இன்னொரு தவறு எந்த ஒரு முறையும் செய்யாதீர்கள்.

இங்குள்ள பலருக்கு திருமணம் ஆகியுள்ளது. அவர்கள் குழந்தைகள் அப்பா எங்கே என உங்கள் வீட்டாரிடம் கேட்கும் போது, அவர்கள் உங்கள் அப்பா சிறையில் உள்ளார் என்றால் அது அந்த குழந்தைக்கு மனது கஷ்டமாக அமைந்துவிடும். இனி இன்னொரு தவறு நீங்கள் செய்துவிட கூடாது. இது எங்கள் வேண்டுகோள் என்பதை விட எங்கள் ஆசை.

நீங்கள் நினைக்கலாம், இங்குள்ள அனைவரும் குற்றம் செய்தவர்கள் இல்லை . அதே போல  பெரிய குற்றம் செய்தவர்கள் கூட வெளியில் இருக்கலாம். எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை. சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் நீங்களும் தவறு செய்து இருப்பீர்கள், யாரேனும் உங்களை தூண்டி விட்டு இருப்பார்கள் . இனி அதற்கு இனங்காமல் , தவறு செய்யாமல் இருங்கள் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கைதிகள் மத்தியில் உரையாற்றினர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago