புதுசேரி மாவட்ட எல்லைக்குள் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகள் சில இருப்பதால், அந்த மாவட்ட மக்கள் வருவதை தடுக்க புதுச்சேரி அரசு முயன்று வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் புதுசேரியில் தற்போது வரையில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், புதுசேரி மாவட்ட எல்லைக்கு அருகில் இருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால்,மாவட்ட எல்லைகளை புதுசேரி அரசு மூடியுள்ளது. உரிமம் இல்லாமல் யாரும் புதுசேரி மாவட்ட எல்லைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், புதுசேரி மாவட்ட எல்லைக்குள் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகள் சில இருப்பதால், அந்த மாவட்ட மக்கள் வருவதை தடுக்க புதுச்சேரி அரசு முயன்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் மேலும் ,சில முக்கிய காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரி மாநில எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், புதுச்சேரி எல்லையில் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடவும், உரிய ஆவணங்கள் இன்றி மாநில எல்லைக்குள் நுழைய முயல்வர்களை திருப்பி அனுப்பவும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…