உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலியே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் மீது அவதூறு பரப்புவதாக கூறி மாரிதாசை கைது செய்த காவல்துறையால் பாஜக மாநில மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் பார்ப்போம் என தெரிவித்தார்.
மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்டதில் வடமாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சரின் தூண்டுதல் இருக்கிறது என்றும் குற்றசாட்டினார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…