அவலம்.! கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளிக்கு செல்லும் கிராம மக்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பழனி அருகே கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களையே கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அவலம் நீடித்து வருகிறது.
  • இதனால், இப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி ஊராட்சியில் கோமதி தியேட்டர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் கூட கழிவறைகள் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில், அங்கு பொதுகழிவறைகள் இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலேயே கழிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களிடம் கழிப்பறைகளைக் கட்டுவதற்கான வசதி இல்லாததால், திறந்தவெளி கழிப்பிடங்களுக்குச் செல்வதாக தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள், பொதுக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆயக்குடியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தங்கள் பகுதிக்கு அந்த வசதி இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் ஆயக்குடி மக்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

4 minutes ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

44 minutes ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

1 hour ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

2 hours ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

2 hours ago