குளத்தை காணவில்லை – புதுக்கோட்டை இளைஞர்கள் போலீசில் புகார்!

Published by
Rebekal

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள குளத்தை காணவில்லை என அப்பகுதி இளைஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

வடிவேலு ஒரு படத்தில் கடன் வாங்கி வெட்டிய கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அந்த இடத்திற்கு காவலர்களை  அழைத்து சென்று காண்பித்து இருப்பார். இந்த காட்சி போலவே அண்மை காலங்களாக பல இடங்களில் தங்கள் பகுதியில் இருந்த நீர்நிலைகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஊரணி எனும் ஏரிக்கு அருகில் அம்புலி ஆற்றில் காமராஜர் கட்டிய அணையிலிருந்து தண்ணீர் வர வழிகள் இருந்துள்ளது.

ஆனால், தற்பொழுது அப்பகுதியில் இருந்த நீர் வழித்தடங்கள் காணாமல் போனதோடு ஆக்கிரமிப்பு காரணமாக நீர்நிலைகளும் சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடக்கு பக்கத்திற்கான பாசனத்திற்கு 1808 இல் குமிழி அமைக்கப்பட்டிருந்த நிலையில் 21 கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த குளத்தை தற்பொழுது காணவில்லை எனவும், அதனை கண்டுபிடித்து தாருங்கள் எனவும் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் பலன் கிடைக்காததால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் நீரின்றி அமையாது உலகு அமைப்பின் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். மேலும், உங்கள் தொகுதியின் முதல்வர் திட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கும் அம்புலி ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாய் தடுப்பு சுவர் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

16 seconds ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago