650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது.

அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன்பின், கடந்த ஜன்.17-ல் வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதுபோன்று, ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைக்கு உணவாக உயிருடன் சேவல் – போலீசார் வழக்கு பதிவு!

இந்த நிலையில், புதுக்கோட்டை அடுத்த முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊர் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர், புதுக்கோட்டை நகர காவல் கண்காணிப்பாளர், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மேலும், இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்க உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல்  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

Recent Posts

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

54 minutes ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

1 hour ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

2 hours ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

2 hours ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

3 hours ago

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

4 hours ago