பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த தேதிகளில் விடுமுறை – வெளியான அறிவிப்பு!

Default Image

புதுக்கோட்டை,தஞ்சை மாவட்டங்களுக்கு ஏப்ரல் 11,13 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல,தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் அனைத்து அரசு அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தஞ்சையில் மே 14 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்