புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவச உணவு வழங்கப்படும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

Published by
Rebekal

புதுக்கோட்டையில் இயங்கி வரக்கூடிய அம்மா உணவகத்தில் இன்று முதல் ஊரடங்கு முடியும் வரை தனது சொந்த செலவில் இலவச உணவு வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிவித்துள்ளார்.

மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது அம்மா உணவகம் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏழை எளிய மக்கள் அனைவரும் மூன்று வேளையும் குறைந்த விலையில் உணவு வாங்கி உண்டு வந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த அம்மா உணவகம் தொடருமா என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்தாலும் தொடர்ந்து அம்மா உணவகம் அதே பெயருடன் இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் திமுக கட்சியை சேர்ந்த பலர் அம்மா உணவகத்தில் தற்பொழுது இலவசமாக உணவு வழங்குவதற்காக நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் செயல்படக்கூடிய அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் இயங்கக்கூடிய அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை தனது சொந்த செலவில் அவர் உணவு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

7 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

7 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

8 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

9 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

9 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

10 hours ago