Pudukottai Vanniyan Viduthi - Jallikattu 2024 [File Image]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த திங்கள் (தை 1, பொங்கல் தினம்) முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள், செவ்வாய் அன்று பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!
அதே போல மற்ற பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன் விடுதி பகுதியில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 594 காளைகள் பங்குபெற்றன. இன்று காலை முதல் மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் 234 வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் 25 காளைகளை அடக்கி திருச்சி மாவட்டம் சூரியூரை சேர்ந்த சிவா எனும் ஜல்லிக்கட்டு வீரர் முதல் இடத்தை பெற்றார். அவருக்கு முதற்பரிசான பைக் மற்றும் கோப்பையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். சூரியூர் சிவா இன்றைய போட்டியில் 25 காளைகளை அடக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…