பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை 1 , நிலை 2, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் நிர்வாக நேரம் போக மீதி நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும் என புதுசேரி பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களாக இருந்து இந்த தலைமை பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் நிர்வாக பணிகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை தவிர்த்து வருவதாக புதுசேரி பள்ளி கல்வி துறைக்கு புகார்கள் எழுந்து வந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே ஓர் உத்தரவு இருந்தும். அதனை யாரும் பின்பற்றப்பட வில்லை எனவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதனை குறிப்பிட்டு தற்போது புதுசேரி பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு அதிரடி உத்தரவை புதுசேரி பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் 712 பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அதாவது, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை 1, நிலை 2, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிர்வாக நேரம் போக மாணவர்களுக்கு கண்டிப்பாக பாடம் எடுக்க வேண்டும். என உத்தரவிட்டு, அதற்கான நெறிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.
அதில், பள்ளி முதல்வர்கள் வாரத்திற்கு ஆறு வகுப்புகள் எடுக்க வேண்டும். துணை முதல்வர்கள் வாரத்திற்கு 12 வகுப்புகளும் நடத்த வேண்டும். கிரேடு-1 தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 6 வகுப்புகள் நடந்த வேண்டும்.
கிரேடு-2 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 10 வகுப்புகளை மாணவர்களுக்கு கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும்.’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க கண்காணிப்பு குழு ஒன்று திடீரென விசிட் அடிக்கும் என கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…