இந்தியாவில் கொரோன தொற்றால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு இரயில் மூலம் பத்திரமாக சொந்த ஊர் அனுப்பப்படனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு மூலம் புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது. இதன் விளைவாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 1200 தொழிலாளர்கள் இன்று அதிகாலை இவர்களுக்கான சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சிறப்பு ரயிலை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் அருண் உள்ளிட்டோர் கொடியசைத்து அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன்னதாக காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 355 பேர் இன்று சிறப்பு ரயில் மூலம் காரைக்காலிலிருந்து உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது காரைக்காலில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த ரயில் இரவு 12 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தது. அவர்களுடன் புதுச்சேரியில் காத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் சேர்த்து 1200 பேர் பீகார், உத்திர பிரதேசம் சென்றனர்.
இதே போல் அடுத்ததாக அசாம், காஷ்மீர் மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதேபோல அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசிய, சவூதி அரேபியா உள்ளிட்ட வெளி நாட்டில் உள்ள தொழிலாளர்களை விரைவில் இங்கே அழைத்து வர உள்ளனர் என்றும் புதுவை மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…