புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவார். இவர்கள் உயிரிழப்புக்கு காரணம் குறிப்பிட்ட கொரோனா வார்டில் ஆக்சிஜன் வினியோக தட்டுப்பாடுதான் என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எம்.பூவதி அவர்கள், மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் ரவிநாதன், மருத்துவ துறை தலைவர் சி.பாபு ஆனந்த், மற்றும் செவிலியர்கள் 5 பேர் என 7 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையமானது, மருத்துவ கல்லூரி இயக்குனர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…