புதுசேரி முழுவதும் மின்தடை ஏற்படுத்தியது தவறு. அதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். – புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
புதுசேரியில் மின்சாரத்துறையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ‘மின் ஊழியர்கள் செய்வது சரியில்லை. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அண்மையில் புதுசேரி முழுவது ஏற்படுத்தப்பட்ட செயற்கை மின்தடையால், மருத்துவமனையில் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவர். கோரிக்கை எதுவாக இருந்தாலும் போராட்டம் அதற்கு தீர்வல்ல. இது போன்ற இடையூறு செய்யும் வேலைகளில் ஈடுபடுவோர் நிச்சயம் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். ‘ என புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…