CMStalin TN [ImageSource-ANI]
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.
பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், இம்முறை தேர்ச்சி பெறாதவர்களுக்கு வெற்றிக்கு இன்னும் ஒருபடிதான், விரைவில் நீங்கள் வெற்றி பெற வாழ்துகிறேன். உங்களின் உயர்கல்விக்கு, நமது அரசு நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. நம்பிக்கையுடன் முன்னேறிச்செல்லுங்கள், இந்த உலகை வெல்ல… என பதிவிட்டுள்ளார்.</p
>
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…