தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

Published by
Ragi

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைப்பெற்றது.தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அதற்கான மாணவர் சேர்க்கையை ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. அதன்படி முதற்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதி நிறைவடைந்தது.

95ஆயிரம் இடங்கள் காலியாகி இருந்த நிலையில் சுமார் 20% இடங்கள் மட்டுமே நிரம்பப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரான சி.பூரணசந்திரன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கல்லூரிகளில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களை விதிமுறைகளை பின்பற்றி தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் சேர அனுமதிக்கலாம் என்றும், சுழற்சி 1-இல் கிடைக்காத மாணவர்களுக்கு சுழற்சி 2-இல் இடம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில கல்லூரிகளில் இருக்கும் இடங்களை காட்டிலும் குறைவாக விண்ணப்பங்களை பெற்றிருக்கும். அந்த கல்லூரி முதல்வர்கள் அனைவரும் மாற்று நடவடிக்கைகளை பின்பற்றி காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவித புகாருக்கும் மாணவர் சேர்க்கை குழுவினர் வழிவகுக்க கூடாது என்றும், அனைவரும் முதல்வரின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சேர்க்கையை நடத்தி முடிக்குமாறு கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago