அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

கடந்த மாதம் (செப்டம்பர்) 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக கட்சி சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு பேசுகையில் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து திமுக சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவின் பேச்சுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்,  கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு மீது புகார் அளித்தார். அதன் பெயரில் குமரகுரு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

திமுகவினர் போராட்டங்கள், காவல்துறை புகார், வழக்குப்பதிவு ஆகியவற்றை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், நான் தவறுதலாக அவ்வாறு பேசிவிட்டேன். அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் திமுகவினர் போராட்டங்களை கைவிட்டனர்.

தன் மீதான வழக்குக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, முதல்வர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பொதுக்கூட்டம் நடத்தி பொதுவெளியில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

11 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

12 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

13 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

14 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

15 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

16 hours ago