இன்று முதல் வரும் 9 வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரை பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய பேரிடர் மெளனமாய் சட்டத்தின்கீழ் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டும், ஆடி அமாவாசை நிகழ்ச்சிக்காக கடற்கரையில் அதிக மக்கள் கூடும்பட்சத்தில், அரசின் விதிகளை பின்பற்றுவதிலும், கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இன்று முதல் 9ம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் முக்கிய கோவில்களில் 1,2,3,4 போன்ற தேதிகளில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்கியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையில் பொதுமக்கள் கூடி வழிபடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

27 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

54 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago