10,11 மற்றும் 12ம் வகுப்பு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த தேதியில் நடைபெறும் என்ற குழு அட்டவணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும், செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 – மே 2 வரை நடைபெறும் என அறிவித்தார்.
மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும். மே 9 முதல் மே 31 ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.
இந்நிலையில், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த தேதியில் நடைபெறும் என்ற முழு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…