எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை.. நாளை நமதாகட்டும் .. கமல் ட்விட்.!

Default Image

திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையும் கூட என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரெண்டாக இருந்து வந்த அவரை பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டர். அதில், நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தி, திருமிகு.ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும் என பதிவிட்டு உள்ளார்.

இந்த பணியிட மாற்றம் செய்து உத்தரவில் சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பித்ததக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்