சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை வீட்டிற்குள் அடங்கி கிடைக்கும் நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மக்களுக்காக வெளியே வந்து உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவம் பார்த்து மக்களுக்காக உயிரை தியாகம் செய்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட இன்று பலரும் எதிர்ப்பிலும், தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில், மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மறியல் செய்த 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், வேலங்காடு மயானத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கிய 21 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…